ரேஷன் கடை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் முக்கிய தகவல்

சென்னை: கூட்டுறவு துறை அமைச்சர் முக்கிய தகவல் ...... தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் ரேஷன் கடைகள் தான் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர்.

இதனையடுத்து இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்னதாக ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் ஆக்கியஸ் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கையை அரசு ஆலோசிப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது. தற்போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, மத்திய அமைச்சர்கள் தமிழக ரேஷன் கடைகளை ஆய்வு செய்தனர்.

மேலும் நாட்டிலேயே தமிழ்கத்தில் தான் ரேஷன் கடைகள் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், ரேஷன் கடை ஊழியர்களின் ஓய்வூதியம் பற்றிய அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.