அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார்

சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் நேற்று அதிகாரி செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்து உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். எனவே இதன் மூலம் வருகிற 28- ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது .