வரும் 4ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல்

புதுடில்லி: வரும் 4ம் தேதி தொடங்குகிறது... கேரளாவில் ஜூன் 4ம் தேதி பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் மழையளவு இயல்பாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பில்லை.

அரபிக் கடலில் குறைந்தது ஒருவாரத்துக்கு எந்தவிதப் புயல் சின்னமும் இல்லை என்றும் வானிலைஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் மேலும் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.