விருதுநகரில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. மின் விநியோகம் தடை

விருதுநகர் : பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. மேலும் பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளும் சரி செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம். எனவே அதன்படி நாளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மற்றும் திருத்தங்கல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் சாத்தூர் நகர், படந்தால், மேட்டமலை, திருத்தங்கல் நகர், செங்கமல நாச்சியார்புரம், சடையம்பட்டி, ஓ. மேட்டுப்பட்டி, அமீா்பாளையம், வெங்கடாசலபுரம், ஒத்தையால், பெரியகொல்லப்பட்டி, பூவநாதபுரம், தேவர்குளம், சின்னகொல்லப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

மேலும் ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகா் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.