கனடாவில் இதுவரை கொரோனாவால் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

2.50 லட்சம் பேர் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 338பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 635பேர் பாதிக்கப்பட்டதோடு, 50பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக பத்து ஆயிரத்து 381பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 32ஆயிரத்து 959பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 234பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து 998பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.