திருப்பதியில் இஸ்லாமிய சகோதரர்களின் இசை கைங்கரியம்

திருப்பதி: இஸ்லாமிய சகோதரர்கள் இசை கைங்கரியம்... திருப்பதியில் பிரம்மோற்சவம் நடந்து வரும் நிலையில், தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவான்களான இஸ்லாமிய சகோதரர்கள் 2 பேர் இசைக் கைங்கரியம் செய்து வருகின்றனர்.

பிரபல நாதஸ்வர கலைஞரான ஷேக் சின்ன மவுலானாவின் பேரன்களான அவர்கள் 2 பேரும் ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகின்றனர்.

கரவாடி கிராமத்தில் ஒரு கோவிலை நிர்வகித்து வரும் இவர்கள் 27 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு இசை கைங்கரியம் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவான்களாக நியமிக்கப்பட்டது தங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.