48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்... அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்

சென்னை: மன்னிப்பு கேட்க வேண்டும்... 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ் விடுத்துள்ளார்.

48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்புக் கேட்க தவறினால் அண்ணாமலை ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி சார்பில் வழக்குரைஞர் வில்சன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.