கலை அறிவியலிலும் புதிய பாடத்திட்டம்... உயர் கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

கிருஷ்ணகிரி: புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டும் கலை, அறிவியலிலும் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் வரக் கூடாது என்பதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. மிக விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

பொறியியல் கல்லூரியில் மாற்றம் கொண்டு வந்து உள்ளோம். முதல்வர் அறிவித்து உள்ள நான் முதல்வன் திட்டம் மூலம் கலை அறிவியல் படிப்பிலும் புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்படும். குறிப்பாக தொழில் முனைவர்களாக மாற்றும் வகையில் உலகை பற்றியும், பன்னாட்டு அறிவியல் பற்றியும் கல்வி கொண்டு வரப்படும் என்றார் அமைச்சர் பொன்முடி.

தமிழக அரசு குறித்து ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு தமிழக அரசு சரியாக செயல்படுகிறது என அவர் கூறியது சரி என்று பதிலளித்தார் பொன்முடி.