மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிவு

மேட்டூர்: நீர்வரத்து சரிவு .... கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று 824 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 847 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது .

அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது .ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை 9 மணி முதல் 8000 கன அடியாக குறைக்கப்பட்டது.


இதனை அடுத்து அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து கொண்டே வருகிறது.

நேற்று 106.61 அடியாக இருந்தா மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 16.02 அடியாக சரிந்தது .இதையடுத்து இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.