பணக்கார நண்பர்கள் யாரும் பணம் கொடுத்து டிக்கெட்டு எடுக்கலை

புதுடில்லி: யாரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கலை... உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, தனது பணக்கார நண்பர்கள் யாரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவில்லை என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா விமர்சித்துள்ளார்.

அகமதாபாத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியை ஏராளமான பிரபலங்கள் நேரில் காண உள்ளனர். இதே போன்று சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை காண உள்ளனர்.

இந்நிலையில், தனது நண்பர்களாக இருக்கும் தொழிலதிபர்கள், பணம் கொடுத்து டிக்கெட் வாங்காமல், இலவச பாஸ் மூலம் போட்டியை காண இருப்பதாக ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பணக்காரர்கள், கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்காதது முரணாக உள்ளது என்றும் விமர்சித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.