நடப்பு ஆண்டில் சிபிஎஸ்சி மாணவர்களுக்குத் தேர்வு கட்டாயம் என அறிவிப்பு

நடப்பு ஆண்டில் சிபிஎஸ்சி மாணவர்களுக்குத் தேர்வு கட்டாயம் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவலானது. இதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடப்பு ஆண்டில் சிபிஎஸ்சி மாணவர்களுக்குத் தேர்வு கட்டாயம் என
சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.