அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்

கொழும்பு: கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரை அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளும் ரத்து செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் விடுதலை: நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டனைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.