சென்னை: டிஸ்சார்ஜ் ஆனார்... கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஓ.பன்னீா்செல்வத்துக்கு அண்மையில் சளி பிரச்னை இருந்தது. உடனே அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டாா். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, ஜூலை 15ஆம் தேதி சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம்
சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக்
குழுவினா் அவரை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வந்தனர்.
இந்த
நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இருநாள்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அவரை
அறிவுறுத்தியுள்ளனர்.