நவம்பர் மாதம் வரை ரேசன் கடைகளில் ஒருகிலோ கோதுமை இலவசம்

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஒருகிலோ கோதுமை நவம்பர் மாதம் வரை இலவசமாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் கூறியிருப்பதாவது:

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் கோதுமை தர உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கோதுமையையும் நவம்பர் வரை இலவசமாக தர உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒருகிலோ கோதுமையை தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்துகொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்தம் 2 கிலோ கோதுமையை பயனாளர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரும்பும் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்க வேண்டும் என்று ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் தெரிவித்துள்ளார்.