மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது

மயிலாடுதுறை: ஒருவர் கைது... மயிலாடுதுறையில் டாஸ்மாக் மது பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து தம்பியை கொலை செய்த விவகாரத்தில் கைதான இருவரில் ஒருவர் மட்டுமே கொலையில் தொடர்புடையவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சொத்து தகராறில் பழனி குருநாதன் என்பவரும் அவருடன் பணி செய்து வந்த பூராசாமி என்பவரும் மது அருந்திய நிலையில் உயிரிழந்தனர்.

இதையடுத்து அவர்களது மரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

பின்னர் விஷம் கொடுத்த வழக்கில் பழனி குருநாதனின் சகோதரர்கள் பாஸ்கரன், மனோகர் ஆகிய இருவர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் பாஸ்கர் என்பவர் அளித்த வாக்கு மூலத்தின்படி அவரை மட்டும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.