நாளை முதல் பார்க்கிங் கட்டணம் உயர்வு... மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நாளை 14ம் தேதி முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு உயர்த்துவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை 14ம் தேதி (நாளை) முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு உயர்த்துவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 6 மணி நேரம் வரை ரூ.20 ஆகவும், 12 மணி நேரம் வரை ரூ.30 ஆகவும், 12 மணி நேரத்திற்கு மேல் ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

6 மணி நேரத்திற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 12 மணி நேரத்துக்கு ரூ.500ல் இருந்து ரூ.750 ஆகவும், ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பார்க்கிங் கட்டணத்தில் மெட்ரோ ரயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும். இந்தச் சலுகை மின்சார ரயில் பயணிகளுக்குக் கிடையாது. அவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள். பயணிகளிடம் ஏன் பாரபட்சம் காட்ட வேண்டும் என மின்சார ரயில் பயணிகள் தவித்து வருகின்றனர்.