நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்

நாளை தொடக்கம்... நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை 18 நாட்கள் நடக்க உள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் 11 மசோதாக்கள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகின்றன. இவை தவிர மேலும் 12 மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

கொரோனா பரவலை தடுக்க எம்.பி.க்கள் வருகையை மின்னணு முறையில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடருக்கு முன்பாக, எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.