பைக் பின்னாடி உட்கார்ந்திருப்பவர்களும் ஹெல்மேட் அணியணும்

கோவை: இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம். வரும் 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக கோவை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

கோவை மாநகரில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.

தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருவோர் மீது மோட்டார் வாகன விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஒருவார காலத்திற்கு போக்குவரத்து பூங்காவில் (Traffic Park) தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.