குடிநீர் பிரச்னையை தீர்த்து வைத்த அதிகாரிகளுக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு பாராட்டு

பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நான்குசாலை சந்திப்பில் காவிரி குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்த அதிகாரிகளுக்கு கூட்டமைப்பின் சார்பில் தலைவர் பழ.ராஜ்குமார் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பூதலூர் நான்கு சாலை சந்திப்பு மற்றும் பேருந்து நிலைய பகுதியில் 24 மணி நேரமும் பொது மக்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கடந்த செப்டம்பர் 29ம் தேதி அன்று பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்தை பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

உடனடியாக தலையிட்ட வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நான்கு சாலை சந்திப்பு மற்றும் பேருந்து நிலைய பகுதியில் குடிநீர் வைக்கும் இடத்தை ஆய்வு செய்து மறுதினமே நான்கு சாலை சந்திப்பில் காவிரி குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

முற்றுகை போராட்டத்தை ஒட்டி உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அனைவருக்கும் பொது மக்களும் பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பினரும், அதன் தலைவர் பழ.ராஜ்குமாரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.