பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் பாட்டில் வழங்க திட்டம்

பொதுமக்களுக்காக ஆண்டு தோறும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் வழங்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொக்கத் தொகை ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்படும்.

அதேபோல் இந்த ஆண்டும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, செங்கரும்புடன் ரூ.1000 பணம் ஆகியவை இருக்கும்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 'பொங்கல் தொகுப்பு' திட்டத்தின் கீழ் மக்களுக்கு 100 மி.லி நெய் பாட்டில்களை ரேசன் கடைகளில் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக மதுரை ஆவினில் 2 லட்சத்து 52 ஆயிரம் நெய் பாட்டில்கள் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.