விமான எரிபொருள் பிரச்னைக்கு தீர்வு காண திட்டம்: விமான சேவைகள் அமைச்சர் தகவல்

கொழும்பு: விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35,000 மெட்ரிக் தொன் எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலையை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வருகை முனையத்தில் 25 குடிவரவு கவுண்டர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.