கவுகாத்தியில எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்த பிரதமர் மோடி

கவுகாத்தி: பிரதமர் திறந்து வைத்தார்... நாட்டின் முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருக்கும் நிலையில், இன்று கவுகாத்தியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கவுகாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.

நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலம் சென்று கவுகாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.1120 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று கவுகாத்தியில் 11000க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்கும் மெகா பிஹு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.