தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் பொங்கல் விழா , இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று பொறையார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு தோரணங்கள் கட்டப்பட்டு பெரிய பானைகளில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து வைத்து பச்சரிசி வெல்லம்பால் கலந்து பொங்கல் வைக்கப்பட்டது. இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோருடன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பொங்கல் வைத்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கும் குப்பைகள் உரமாகும் மண் வளத்தை அதிகரிக்கும், விஷமாகும் மண் வளத்தை அழிக்கும், குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களுடன் பல வண்ண நிறங்களில் கண்ணை கவரும் வகையில் கோலமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தனர்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த ரங்கோலி கோலங்கள் சட்டமன்ற உறுப்பினர் வேத முருகன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.