பொங்கல் பண்டிகை .. ரயில்களில் இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 11ஆம் தேதி பயணம் மேற்கொள்ள இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 12-ம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 14ஆம் தேதியும் , ஜனவரி 13ஆம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 16ஆம் தேதியும் , ஜனவரி 14ஆம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 17ஆம் தேதியும்,

இதனை அடுத்து ஜனவரி 15ஆம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 18ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று ஜனவரி 17ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே வாரியம் தகவல் தெரிவித்து உள்ளது.


IRCTC இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஜன. 11 முதல் 17-ம் தேதி வரை பயணம் செய்ய, செப்.13 முதல் 19-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

எனவே பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் முன்கூட்டியே முன் பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.