தள்ளி வைக்கப்பட்டுள்ளது... சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த சிறப்பு முகாம் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன்பெற்று கொண்டு வருகின்றன. இந்த நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.


இதையடுத்து இம்முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். பலர் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையை வைத்து உள்ளனர். அந்த அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என ஆராய்ந்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று நடக்கவிருந்த சிறப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் வருகிற டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து உள்ளது.