மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம்

கொழும்பு: மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியுடன் அவர் இலங்கைக்கு வருகை தந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.

இப்ராஹிம் மொஹமட் சொலி மாலைத்தீவு குடியரசின் 7 ஆவது ஜனாதிபதி ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.