ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்புரை

ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மிக அவசர தேவையை தவிர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொருட்கள் விநியோகத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் திருமண நிகழ்வு மற்றும் மத வழிபாடு உட்பட மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.