டில்லியில் வெள்ளம் நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: அமித்ஷாவிடம் பிரதமர் மோடி ஆலோசனை… நாடு திரும்பிய பின் டில்லியில் வெள்ளம் நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.

பிரான்ஸ் அமீரகம் பயணங்களை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக துணைநிலை ஆளுநருடன் தொடர்பு கொண்டு தலைநகரில் உள்ள மழை நிலவரத்தையும் நிவாரணப் பணிகளையும் கேட்டறிந்தார்.

டெல்லியில் நேற்றுமாலை தொடர்ச்சியாக 3 மணி நேரம் மழை கொட்டியதால் நகரில் வடியத் தொடங்கிய வெள்ளம் மீண்டும் பெருக்கெடுத்து ஓடியது.

முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கிக் கிடந்தது. யமுனை நதியின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது. தலைநகரில் வெள்ளம் நிலவரம் குறித்து பிரதமர்மோடி மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.