ஜெர்மனியில் நடந்த ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: பிரதமர் மோடி வாழ்த்து... ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் பெர்லினில் அறிவுத்திறன் குறைந்தவர்களுக்காக ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக விளையாட்டின் 16 வது சீசன் நடந்தது. ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் முதன் முறையாக 202 பதக்கம் கைப்பற்றி, இந்தியா புதிய வரலாறு படைத்தது. இந்நிலையில் விளையாட்டு போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 202 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெர்லினில் நடைபெற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 76 தங்கப் பதக்கங்கள் உட்பட 202 பதக்கங்களை வென்ற நமது விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்.

விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.