வரும் 25ம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் பயணம்

புதுடில்லி: ஒரு நாள் பயணமாக வரும் 25ம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியின் கிரீஸ் பயணத்தின் போது, வர்த்தகம் மற்றும் முதலீடு, கப்பல் போக்குவரத்து, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, வரும் 25ம் தேதி ஒருநாள் பயணமாக ஏதென்ஸ் நகருக்குச் செல்கிறார். அங்கு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசைச் சந்தித்துப் பேசுகிறார்.

இதனிடையே, ஐரோப்பாவில் இந்தியா முதலீடு செய்வதற்கு கிரீஸ் நுழைவாயிலாக செயல்பட விரும்புவதாகக் கூறியுள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் நாட்டு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை தனியார் மயமாக்கலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.