இங்கு நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் .. தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அண்மை காலமாக தனியார் துறைகள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் மாவட்டம் வாரியாக தனியார் துறைகள் அவ்வப்போது மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து அதன்படி நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ காலேஜ் வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.


மேலும் இம்முகாமில் ஐடி, உணவகம், மருத்துவம் உள்ளிட்ட 125- க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த நிறுவனங்கள் வாயிலாக சுமார் 1000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த முகமானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இஇதையடுத்து தில் பங்கேற்க விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.