மதுரையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை : தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் .... மதுரை மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமானது கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை தூது இதில் பிரபல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.அதனால் தற்போது வேலை வாய்ப்பை நாடுவோர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாமிற்கு வருபவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரக்குறிப்பு உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். அவரவர் கல்வி தகுதிகளுக்கேற்ப வேலைகள் வழங்கப்படும் என தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலை தேடும் நபர்கள் மற்றும் வேலை வாய்ப்பை அளிக்கவுள்ள நிறுவனங்கள் முன்கூட்டியே http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தகவல் கூறப்பட்டுள்ளது.