கடலூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 30) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

aகடலூர் : கடலூர் மாவட்டத்தில் வடலூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 30 ஆம் தேதி நடைபெறுகிறது.இது பற்றி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, கடலூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பண்ரூட்டி வட்டம், மங்குகூர் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஜூலை 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் 200க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதை அடுத்து இம்முகாமில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். மேலும் இம்முகாமில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த 8, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, கலை அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தமிழ்நாடு தனியார் துறை இணையதள முகவரியில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். அல்லது 04142-290039, 9499055908 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.