இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல்

சென்னை: இடைத்தரகர்கள் இல்லாமல் 17 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாம்.

பொங்கல் பரிசு தொகுப்புக்காக, இடைத்தரகர்கள் இல்லாமல் 17 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்களில் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் தொடர்பாக, அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இம்முறை பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானதாக இருக்கும் என உறுதியளித்தார்.