புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா இல்லை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 என அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 45,537 பேர்கள் குணமாகியுள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் வேலை நடைபெற்றது. இரண்டு நாட்கள் அலுவலகம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட அவரது வீடு, அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நாராயணசாமிக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்யப்பட்டது.