ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு வருகை

இந்தியா: மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிபோனது. இதையடுத்து இத்தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ள நிலையில் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

இந்த நிலையில் தனது தொகுதியான வயநாட்டை பார்வையிடுவதற்காக இன்றும் , நாளையும் ராகுல் காந்தியின் பயணம் திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் முன்னதாக ராகுல் காந்தி இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகிறார் .

டெல்லியிலிருந்து விமான மூலம் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடையும் அவர் , அதன் பின்னர் கார் மூலம் உதகை அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்குகிறார்.

இதையடுத்து 1 மணி அளவில் முத்தநாடுமந்து என்னும் தோழர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று மக்களுடன் உரையாடுகிறார். வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல் காந்தி செல்ல இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.