டெல்லியிலிருந்து சண்டீகர் வரை லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி

டெல்லி: லாரியில் பயணம்... டெல்லியிலிருந்து சண்டீகர் வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லாரி ஒன்றில் பயணம் மேற்கொண்டார்.

சிறிது தூரம் லாரியை ஓட்டிய ராகுல் காந்தி, பின்னர் லாரியின் பக்கவாட்டு இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்தார்.

சாலையில் தம்மை அடையாளம் கண்டவர்களை நோக்கி ராகுல் காந்தி கையசைத்தார். இரவு நேரத்தில் கனரக வாகன டிரைவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவே ராகுல் காந்தி லாரி பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். நடைபயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியை தனிப்பட்ட சக்தியாக மாற்றினார்.

அதனால்தான் கர்நாடகாவில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் பெற்றது. அதுபோல்தான் இப்போது மக்களுடன் நெருங்கி பழகுகிறார். இதனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.