கேரளா, கர்நாடகாவுக்கு ரயில் போக்குவரத்து... சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகாவுக்கு வரும் ஞாயிறு முதல் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தெற்கு ரயில்வே முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில்வே போக்குவரத்தினை நிறுத்தியிருந்தது. இந்நிலையில் 6 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கேரளா மற்றும் கர்நாடகா இடையே சென்னையிலிருந்து ரயில் வரும் ஞாயிறு முதல் துவங்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செப்.,27 லிலும், சென்னை-மங்களூரு
இடையே செப்.,28 லிலும் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. சென்னை மைசூரு
இடையேயான ரயில் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து திருவனந்தபுரம்
செல்லும் ரயில் மாலை 7.45 க்கு கிளம்பி திருவனந்தபுரத்திற்கு மறுநாள் காலை
11.45க்கு சென்றடையும்.
திரும்ப மதியம் 3 மணிக்கு புறப்பட்டு
மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை வந்தடையும்.சென்னையிலிருந்து
மங்களூருக்கு இரவு 8.10 க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.10 க்கு
மங்களூரு சென்றடையும். திரும்பவும் மதியம் 1.30 க்கு மங்களூருவிலிருந்து
புறப்பட்டு மறுநாள் காலை 5.30க்கு சென்னை சென்றடையும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.