மகாராஷ்டிரா: ரயில்வே ப்ளாட்பாரம் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர்
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் பல்லார்ஷா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் 1ல் இருந்து 4வது நடைமேடைக்கு செல்ல ஏராளமான பயணிகள் தரைப்பாலத்தை கடந்து சென்றனர்.
அப்போது மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் நடைமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் 60 அடி உயரத்தில் இருந்து கீழே தண்டவாளத்தில் விழுந்தனர்.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.