தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை

சென்னை: தமிழகத்தில் செப். 8 வரை மழை பெய்யும் ... வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த ஒரு வாரமாக கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது.

இந்நிலையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் வரும் செப். 03 முதல் 08ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதையடுத்து சென்னையை பொறுத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,

தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் ஒரு வாரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.