ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்துகின்றனர்

ராமேஸ்வரம் : மீனவர்கள் 2வது நாளாக போராட்டம் ... கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 27 பேருடன் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். எனவே இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற 27 மீனவர்கள், 5 விசைப்படகுகளை விடுவிக்க கோரி நேற்று முதல் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.