பொறியியல் கலந்தாய்விற்கான ரேண்டம் எண் நாளை வெளியாகிறது

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்திற்கும் மாணவர்களுக்கான கலந்தாய்விற்கான ரேண்டம் எண் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ....

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 5 -ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்திருக்கிறது. மேலும், இதுவரை மட்டும் பொறியியல் படிப்பிற்கு 1,87,693 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்திற்கும் மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த மாணவர்கள் அவரவர் ரேண்டம் எண்ணை இணையதளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விளையாட்டு பிரிவு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.