கேரளாவில் வரும் அக்.16 ஆம் தேதி ரேசன்கடை இயங்கும்


கேரளா : கேரளா மாநிலத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 11 மாத கிட் வழங்கல் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர். மேலும், 11 மாத கிட் வழங்கல் நிலுவைத் தொகை வழங்குதல், ஊதிய தொகுப்பை சீரமைத்தல்,

மேலும் பழுதடைந்த இ-பிஓஎஸ் இயந்திரத்தை முழுமையாக சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 16-ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையே, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ஜி.ஆர். அனில் ரேஷன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வருகிற அக்.16 ஆம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் வாபஸ் பெற்று உள்ளனர்.

அதாவது, ரேஷன் துறைகளில் உள்ள குறைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூடிய விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.