வேளாண் நிலத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கண்ணி வெடி சோதனை

உக்ரைன்: விவசாயியின் சோதனை... உக்ரைன் நாட்டு விவசாயி ஒருவர், வேளாண் நிலத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் டிராக்டரை இயக்கி கண்ணிவெடி சோதனை நிகழ்த்தி வருகிறார்.

கார்கீவ் மாகாணத்திலிருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் அங்கு ஏராளமான கண்ணிவெடிகளை புதைத்துவிட்டுச் சென்றுள்ளன.

இதனால், விவசாயிகள் பலர் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். விதைக்கும் பருவம் நெருங்கி இருப்பதால், விவசாயி ஒருவர் இதற்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ளார்.

ரஷ்ய படைகள் விட்டுச்சென்ற பீரங்கியின் கவசத்தை கழற்றி, தனது டிராக்டர் மீது பொருத்தி, அதனை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வயல்வெளியில் இயக்கும் அந்த விவசாயி, அதன் மூலம் கண்ணி வெடி ஏதேனும் புதைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டு வருகிறார்.