மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்

திருச்சி: திருச்சியில் நடந்த பாஜக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பெருங்கோட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மகளிர் அணியின் மாநில பொது செயலாளர் கவிதா ஶ்ரீகாந்த் வரவேற்புரை யாற்றினார். மாநில தலைவி உமாரதி ராஜன் தலைமை உரையாற்றினார்.