பராகுவே நாட்டின் சிறைச்சாலையில் கலவரத்தால் பெரும் பரபரப்பு

பராகுவே: சிறைச்சாலையில் கலவரம்... பராகுவே நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறை காவலர்கள் 11 பேரை பிணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்திவரும் டகும்பு சிறைச்சாலையில் சுமார் நான்காயிரம் கைதிகள் உள்ளனர்.
திடீரென வெடித்த கலவரத்தை தொடர்ந்து தகர கூரைக்கும், வாசல் பகுதிக்கும் கைதிகள் தீ வைத்தனர். போலீசார் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்தனர்.
பிணை கைதிகளாக உள்ள 11 பேரில் 2 பேரை மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.