இம்மாதம் இறுதிவரை கெடு விதித்த சச்சின் பைலட்

புதுடில்லி: இம்மாதம் இறுதிவரை கெடு... ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கும் அசோக் கெலாட் அரசுக்கும் சச்சின் பைலட் இம்மாத இறுதிவரை கெடு விதித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராகவும் வேலைவாய்ப்புக்கான தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகவும் ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் சச்சின் நடைபயணம் மேற்கொண்டார்.

அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையிலான 125 கிலோ மீட்டர் நடைபயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 15 எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். தமது கோரிக்கைகளை இம்மாத இறுதிக்குள் ஏற்காவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என சச்சின் பைலட் தெரிவித்தார்.