வரும் 10ம் தேதி முன்பு அரச ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படும்

கொழும்பு: அரசாங்கம் உறுதி அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் இவை அனைத்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தாண்டுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு இரண்டு தடவை சம்பளம் வழங்க வேண்டி இருப்பதால், அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பிரதமர் கூறியிருந்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதியை விடுவிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தார்.