வீடுதோறும் மூவண்ணக்கொடி .. அஞ்சலகங்களில் வரும் 13 முதல் 15 வரை தேசியக் கொடிகள் விற்பனை

சென்னை: அஞ்சலகங்களில் வருகிற ஆகஸ்ட் 13 தேசியக் கொடிகள் விற்பனை .... வீடுதோறும் மூவண்ணக்கொடி என்பதை செயல்படுத்த அஞ்சலகங்களில் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ரூ 25 என்ற விலையில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படவுள்ளன.இதையடுத்து www.epostoffice.gov.in என்ற இணையதளம் மூலம் 12ம் தேதி வரை மூவண்ணக்கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

வீடுதோறும் மூவண்ணக்கொடி என்ற இயக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்த சென்னை வடக்கு அஞ்சலகக் கோட்டத்தின் சார்பில் மகளிர் பேரணி இன்று அண்ணா நகரில் நடைபெற்றது. தேசிய ஒற்றுமை மற்றும் பெருமிதத்தைப் பறைசாற்றும் விதமாக இப்பேரணி அமைந்தது.

பேரணி நிறைவில், சென்னை அண்ணாநகர் முதன்மை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் திருமதி அனிதா பால்துரையிடம் மூவண்ணக்கொடி ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்நிகழ்வில் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் திரு கி லட்சுமணன் பிள்ளை, உதவி கண்காணிப்பாளர் திருமதி முத்துமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.