பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.எனவே அதன் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக். 1 முதல் அக்.9 ஆம் தேதி வரை விடுமுறை எனவும், 6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.5 ஆம் தேதி வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 10 ஆம் தேதியும், 6 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 6 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இந்தாண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

மேலும் தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.